மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு

காரைக்கால் பகுதியில் சைல்டு லைன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 3:59 am

காரைக்கால் பகுதியில் சைல்டு லைன் மூலம் கிராமப்புறக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றது.
குழந்தைகள் பல்வேறு விழிப்புணர்வு அடைவதற்கேற்ப மாவட்ட அளவில் பல கிராமங்களில்,  திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி,  தொடர் நிகழ்வுகளாக நடத்தப்பட்டுவருகிறது. நிரவி தைக்கால் தெரு  பகுதியில் திறந்தவெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சைல்டு லைன் மூலம் நடத்தப்பட்டதன் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 காரைக்கால் சைல்டுலைன்  திட்ட ஒருங்கிணைப்பாளர் டி. விமலா  கலந்துகொண்டு சைல்டுலைன் 1098 எண் குறித்தும்,18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம் என்பதை குறிக்கும் எனவும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 மூலம் கடுமையான தண்டனை வழங்க விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.
 அதனைத் தொடர்ந்து சைல்டுலைன் அணி உறுப்பினர்  து.கணேசமூர்த்தி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தினால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 2015 சட்டப்படி குற்றம் என்பதையும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும் பேசினார். 
உறுப்பினர் து.மரியதாஸ்  குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க முடியும் என்பதை விளக்கியும் பேசினார். கு.மும்தாஜ் சட்ட உரிமைகள் குறித்துப் பேசினார்.  தைக்கால் தெரு பகுதியைச் சார்ந்த பிச்சையம்மாள் வரவேற்று பேசினார்.  சைல்டுலைன் அணி உறுப்பினர் ச.நர்மதா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.