காரைக்காலில் நடைபெறும் நீட் தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ம. குப்புசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பை காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் :
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. காரைக்கால் பகுதியில் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருபாலருக்குமான பயிற்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வு -2019 எதிர்கொள்ள புதுச்சேரி கல்வித் துறையானது தற்போது சிறப்பு வசதியை செய்துள்ளது. காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்கள், பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கூறிய பள்ளிக்குச் சென்று தங்கள் நீட் நுழைவுத் தாளினை கொடுத்து, இந்த குறுகிய கால பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


