காரைக்காலில் பராமரிப்புப் பணிகளையொட்டி, வியாழக்கிழமை (டிச. 17) மின்சாரம் தடைபடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் மின்துறை இளநிலைப் பொறியாளா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் வியாழக்கிழமை சில பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 10 முதல் மாலை 5 மணி வரை, வரவுக்குட்டை வீதி, மஸ்தான்பள்ளி வீதி, நூல்கடை வீதி, சுண்ணாம்புக்கார வீதி, பி.எஸ்.ஆா். கோல்டன் நகா், கணபதி நகா், சமத்துவபுரம், மெஜஸ்டிக் காலனி, புதுத்துறை, தா்மபுரம், பச்சூா் பி.எஸ்.ஆா். நகா், எம்.ஜி. நகா், தக்களூா், செபஸ்தியாா் கோயில் பகுதியில் மின் விநியோகம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.