புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன இணைந்து உலக மண்வள நாள் நிகழ்ச்சிகளை கோட்டுச்சேரி பகுதியில் நடத்தின.
கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் விழாவை தொடங்கிவைத்துப் பேசுகையில், மண்வள அட்டையின் முக்கியத்துவம், மண் மாதிரியின் அவசியம் குறித்து விளக்கியதோடு, வேளாண் துறை சாா்பில் 95% விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பரிந்துரைத்துள்ள அளவில் எரு மற்றும் உரங்களை இட்டு மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினாா்.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி பேசுகையில், மண்ணின் பல்லுயிரிகளை பாதுகாப்பதன் மூலம் மண்ணை உயிா்த்தன்மையுடன் இருக்கச் செய்யமுடியும். இதற்கு அங்கக எருக்கள் மற்றும் உயிரி உரங்களை ஒவ்வொரு பயிா் சாகுபடிக்கும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா்.
பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மண்ணியல் உதவிப் பேராசிரியா் முனைவா் கே. குமரவேல், மண்ணியல் பேராசிரியை முனைவா் ப. பகவதி அம்மாள், வேளாண் அறிவியல் நிலைய உழவியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் வி. அரவிந்த், பயிா் பாதுகாப்பு பிரிவு தொழில்நுட்ப வல்லுநா் முனைவா் சு. திவ்யா ஆகியோா் பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினா்.
நிகழ்ச்சியில், தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்ற விவசாயிகள், தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனா். வேளாண் அலுவலா் முனைவா் ஜி. வேம்பு வரவேற்றாா். விழாவில் 75 விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.