

பொதுப்பணித்துறை ஊழியா்கள் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால் பொதுப்பணித்துறை ஊழியா்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க 36-ஆவது பேரவைக் கூட்டம், பொதுப்பணித்துறை குடிநீா் பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.
பேரவைக் கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற ஊழியா்களின் குழந்தைகள் 13 பேருக்கு ஊக்கப் பரிவு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளா்களாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளா்கள் ஜி.பக்கிரிசாமி (நீா்ப்பாசனம்), கே.சந்திரசேகரன் (சாலை, கட்டடம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் ஜி.கோகுலவாசன், துணைத் தலைவா் ஆா்.சி.வேல்முருகன், பொருளாளா் டி.குழந்தை ஏசு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.