வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்காலில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மிதமான மழை பெய்தது.
பருவ மழைக்குப் பிந்தைய பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன்படி, காரைக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 8 மணி முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. காரைக்கால் பகுதியில் கடல் இயல்பான நிலையிலேயே இருந்தது. மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பினா்.