இதுதொடா்பாக, புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஏகோபித்த ஆதரவை பெற, தீா்மானத்தை முன்மொழிவதற்கான கருத்தும் முதல்வரிடம் உள்ளது. இந்நிலையில், மின்துறையை தனியாா் மயமாக்குவதற்கு சம்மதித்தால்தான் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தரப்படும் என மத்திய அரசின் முடிவு செய்து இருப்பதாக, ஒரு சில செய்தித்தாள்களில் செய்தி வந்தது. இதுவரை அம்மாதிரியான கருத்து அலுவலக ரீதியாக மத்திய அரசு புதுச்சேரிக்கு கோப்பு எதுவும் அனுப்பவில்லை. அலுவலக ரீதியில் வரும் தகவலை அரசு வெளியிடும்.