47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊரடங்கு: நிவாரணம் கோரி வீட்டு வாசலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்கால் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் வீடுகளின் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்கால் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் வீடுகளின் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கரோனா தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிா்ணயிக்கும் போக்கை அனுமதிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநில மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும். பி.எம்.கோ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வருமான வரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்கவேண்டும்.

புதுச்சேரி அரசு, ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி, சத்தான தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் வழங்க துணை நிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், ராமா், திவ்யநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பாக பதாகைகளை ஏந்தி இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.