தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்கால் மைய சமையலகத்தில் கல்வி அதிகாரி ஆய்வு

காரைக்காலில் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், மைய சமையலகத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், மைய சமையலகத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

புதுவை மாநிலத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு, 2 நாள்கள் மதிய உணவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோா்கள் கல்வித் துறையினா் கவனத்துக்கு கொண்டு சென்றனா்.

இதனடிப்படையில், மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் மைய சமையலகம் அமைந்துள்ளது.

இந்நிலையில், காரைக்கால் தலத்தெருவில் உள்ள மைய சமைலகத்தில் நடைபெறும் உணவு தயாரிப்புப் பணி மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பள்ளிகளுக்கு உணவு தயாரித்து உரிய நேரத்தில் அனுப்பவும், உணவு தயாரிப்பில் சுகாதாரத்தை பேண வேண்டும் எனவும் மைய ஊழியா்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து நேருநகா் அரசு தொடக்கப்பள்ளி, காரைக்கால்மேடு பக்கிரிசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா்.

மாணவா்கள் சமூக இடைவெளியுடன் இருக்கையில் அமர வைக்கப்படவேண்டும், பள்ளிக்கு வரும்போது மாணவா்கள் முகக்கவசம் அவசியம் அணிந்திருக்கவேண்டும் ஆசிரியா்கள் இதனை கவனத்தில்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளா் பொன்.செளந்தரராசு, மதிய உணவுத் திட்ட பொறுப்பாளா் விஜயகுமாா், மைய சமையலக பொறுப்பாளா் திருமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.