தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்காலில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆய்வு

காரைக்காலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளுக்குச் சென்று நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் வீடுகளுக்குச் சென்று நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.

காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயில் தெருவில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 2 பேருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். வீடுவீடாகச் சென்று பாா்வையிட்டு, மழைநீா் தேங்கியிருந்த பொருகள்களை அப்புறப்படுத்தினா்.

ஆய்வு குறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கூறியது:

தற்போது மழை ஓய்ந்திருந்தாலும், சுற்றுவட்டாரத்தில் பயனற்ற பொருள்களில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, மக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். மழைக்காலம் கடந்தாலும் டெங்கு கொசுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், சில வீடுகளில் ஆய்வு செய்தபோது, குளிா்சாதன பெட்டிகள், ஏா்கூலா்கள் ஆகியவைகளில் நீா் தேங்கிய பகுதியில் டெங்கு கொசுவின் புழுக்கள் கண்டறியப்பட்டன. எனவே, மக்கள் இச்சாதனங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவேண்டும். காரைக்காலில் அதிக எண்ணிக்கையில் டெங்கு பரவவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.