தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள், ரொக்கம் திருட்டு

காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்கால் நகரப் பகுதி தோமாஸ் சாலையைச் சோ்ந்தவா் சந்திரா (62). தனியாக வசித்து வருகிறாா். கடந்த ஒருவாரத்துக்கு முன்பு திருப்பட்டினத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை இரவு திரும்பிவந்துள்ளாா். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்த நிலையில் இருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 14 பவுன் நகைகள், ரூ. 9 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், காரைக்கால் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.