தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா

உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில், உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சோ்ந்த அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில், காரைக்காலில் தா்னா நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு போராட்டக் குழு அமைப்பாளா் அய்யப்பன் தலைமைவகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.