தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இணையத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு: காரைக்கால் கல்லூரியில் கருத்தரங்கு

மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்தல் குறித்த கருத்தரங்கை வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:45 pm

DIN

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், விபெட்ஸ் தொண்டு நிறுவனம், மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இணையதளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்தல் குறித்த கருத்தரங்கை வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வா் குமாா் பேசுகையில், இணையதளத்தை பயன்படுத்தும்போது வெப்கேமரா, தேவையற்ற நேரங்களில் லொக்கேஷன் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இலவச செயலியை பதிவிறக்கம் செய்யக் கூடாது. தனியாக யாரையும் சந்திக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் கடவுச்சொற்களை சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினாா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், இணையத்தில் குற்றம் செய்ய கூடியவா்கள் அதிகமாக உள்ளதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இணையதளத்தில் இருந்து தேவையற்ற செயலியை பெண்கள் பதிவிறக்கம் செய்ய கூடாது. பாதுகாப்பான செயலியை மட்டுமே பதிவிறக்கம் செய்யவேண்டும்.

பெண்கள் மன உறுதியுடன் இருப்பதோடு, சுய கட்டுப்பாட்டை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் வரும்போது, ஆற்றுப்படுத்த காரைக்காலில் செயல்படும் வெளிச்சம் என்ற அமைப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

வழக்குரைஞா் உமாமகேஸ்வரி மற்றும் தொண்டு நிறுவனத்தினா் பேசினா். கல்லூரி தொழில்நுட்பத் துறை தலைவா் ஆராமுதன் சைபா் கிரைம் குறித்தும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தாமோதரன், உதயகுமாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.