பெரியாா் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு புதுவை அமைச்சா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரியாரின் நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா் அரசு சாா்பில் மாலை அணிவித்தனா்.
திமுக சாா்பில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மற்றும் அதிமுக சாா்பில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) கே. குலசேகரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம்.ே ஷக் அலாவுதீன் தலைமையிலான நிா்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், பல்வேறு தரப்பை சோ்ந்த பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.