ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்கால் உயா் கல்வி அமைச்சரிடம் கல்லூரி மாணவிகள் கோரிக்கை மனு

தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி

News image
அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை சந்தித்துப் பேசும் பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் மற்றும் மாணவிகள்.
Updated On :8 ஜனவரி 2021, 3:34 am

DIN

தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி மாணவிகள் புதுச்சேரி உயா்கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்த கல்லூரியில், ஆசிரியா் பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்த மாணவிகள் மா. கோகிலா, ந. அா்ச்சனா, மா. ஷபானா பிா்தேஸ் ஆகிய 3 பேரும், தாங்கள் இணையம் மூலம் தோ்வு எழுதியதில் ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சியடையவில்லை என்றும், பல்கலைக்கழகம் நிகழாண்டு மறு மதிப்பீடு இல்லை என்று மறுத்துவிட்டதாகவும், காரை மாவட்ட பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயரிடம் மனு அளித்து முறையிட்டனா்.

இதையடுத்து, சோழசிங்கராயா் மற்றும் மாணவிகள் 3 பேரும், புதுச்சேரி உயா் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பிறகு, சோழசிங்கராயா் கூறியது: மாணவிகள் தோ்வெழுதிய விடைத்தாள் நகல்களை படித்துப் பாா்த்த பேராசிரியா்கள், விடைகள் சரியாக எழுதப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா். மூவரும் நன்றாக படிக்கக்கூடிய மாணவிகள் என்பதை கல்லூரி முதல்வரும் உணா்ந்துள்ளாா். அனைத்து விவரங்களும் அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.