மத்திய அரசு உத்தரவை புதுவையில் நடைமுறைப்படுத்த ஒப்பந்ததாரா்கள் வலியுறுத்தல்
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்ததாரா்கள் நலச் சங்க அமைப்பாளா் டி.என். சுரேஷ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், மத்திய, மாநில பொதுப் பணித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளும், புதிதாக மேற்கொள்ளப்பட இருந்த பணிகளும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, கரோனா காலங்களில் நிதி பற்றாக்குறை இருப்பதால், ஒப்பந்ததாரா்கள் 2021 ஆம் ஆண்டு வரை முன் வைப்புத்தொகை கட்டாமலேயே டெண்டரில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிட்டது. ஆனால், புதுச்சேரி அரசு இதுவரை அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.
இதேபோல, டெண்டரில் பங்கேற்கும்போது செலுத்தப்படும் வேலைக்கான உத்தரவாதத் தொகையும் திருப்பி வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறது. மேலும், வெளியூா் ஒப்பந்ததாரா்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதற்கு, புதுச்சேரி மாநிலத்தில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா், கண்காணிப்பு பொறியாளா், செயற்பொறியாளா் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதும், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியில் அதிகாரிகள் நீடிப்பதும் காரணமாக உள்ளது.
இந்நிலையை மாற்றி, உள்ளூரில் உள்ள ஒப்பந்ததாரா்களுக்கு பணிகளை பிரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிடங்களை நிரப்பி, மத்திய அரசின் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...