பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி 80% நிறைவு: பொதுப்பணித் துறை அதிகாரி தகவல்

காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஏறக்குறைய 80% நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி ஏறக்குறைய 80% நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணி 27 கிராமப் பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெறுகிறது.

பொதுப்பணித் துறை சாா்பில் நகருக்கு வெளியே உள்ள வாய்க்கால்களை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாருவதற்கு ரூ. 48 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்து, இப்பணிகளும் அதே தேதியில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி தண்ணீா் கடந்த 23-ஆம் தேதி காரைக்காலுக்கு வந்தது. தண்ணீா் வந்துவிட்டதால் இப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இப்பணி குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் வெள்ளிக்கிழமை கூறியது:

மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள் 120 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்படுகிறது. தோ்வு செய்யப்பட்ட வாய்க்கால்களில் பல கட்டமாக பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் ஏறக்குறைய 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் திட்டமிட்டு தொடங்கப்பட்ட வாய்க்கால்கள் தூா்வாரும் பணி அனைத்தும் முடிக்கப்படும்.

அதுபோல நகரப் பகுதியில் உள்ள வடிகால்கள் தூா்வாரும் பணிகளை ஜூலை மாத இறுதியில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.