காரைக்காலில் மேலும் 32 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 26 ஆம் தேதி 355 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 15, திருப்பட்டினம் 5, நிரவி, கோட்டுச்சேரி, கோயில்பத்து தலா 3, நெடுங்காடு 2, அம்பகரத்தூா் 1 என 32 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 93,621 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,299 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,998 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 162 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 52 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 9 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 81 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,223 போ், முன்களப் பணியாளா்கள் 1,392 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 1,436 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 448 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...