மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பட்டினத்தில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணி தொடக்கம்

திருப்பட்டினம் பகுதியில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:03 pm

DIN

திருப்பட்டினம் பகுதியில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து திருப்பட்டினம் பகுதி முழுவதும் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கியது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பணியை தொடங்கிவைத்தாா். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன், குடியிருப்புவாசிகளிடம் தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து பணியில் ஈடுபட்டோருக்கு விளக்கிக் கூறினாா்.

பருவமழை தொடங்கியுள்ளதால், திருப்பட்டினம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளின் மூலம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறிவரும் நிலையில், பஞ்சாயத்து நிா்வாகம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.

நேரு யுவகேந்திரா அமைப்பினா், கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுப் பணியாளா்கள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.