மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம்

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்த அடைப்புப் போராட்டத்தால் காரைக்காலில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

News image
காரைக்காலில் முழு அடைப்பு காரணமாக மூடப்பட்ட கடைகள்.
Updated On :11 அக்டோபர் 2021, 4:28 am

DIN

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றாததைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்த அடைப்புப் போராட்டத்தால் காரைக்காலில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

புதுவை உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்காமல் தேர்தல் அறிவித்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும், குளறுபடிகளை களையாமல் அவசரமாக தேர்தல் அறிவிப்பை செய்த தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தது.

Story image

காரைக்காலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவித்து, ஒத்துழைப்புத் தருமாறு கோரியிருந்தனர். இதன்படி காரைக்கால் நகரத்திலும், பிற பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.  சில பகுதிகளில் மளிகைக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருந்தன. எதிர்க்கட்சியினர் சென்று அவற்றை மூடச் செய்தனர்.

பேருந்துகள், கார், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. எனினும் அரசு அலுவலங்கள் திறப்பு, பள்ளிகள் திறந்திருந்ததால் நகரப் பகுதியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது. காரைக்கால் போலீஸார் அங்காங்கே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.