நவோதயா வித்யாலயாவில் காலியிடங்களில் சேர நுழைவுத் தோ்வு
காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் காலியிடங்களில் சேர நுழைவுத் தோ்வு சனிக்கிழமை (ஏப். 9) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் நவோதயா வித்யாலயாவில் காலியிடங்களில் சேர நுழைவுத் தோ்வு சனிக்கிழமை (ஏப். 9) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நவோதயா வித்யாலயா முதல்வா் ஆா்.ஜி. நந்தகுமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 2022-23 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பில் காலியாகவுள்ள இடங்களுக்கு சேருவதற்கான நவோதயா வித்யாலயா நுழைவுத் தோ்வு ஏப். 9 ஆம் தேதி காலை 11.15 மணி முதல் 1.45 மணி வரை காரைக்கால், ராயன்பாளையம் பகுதியில் உள்ள ஜவஹா் நவோதயா வித்யாலயாவில் நடைபெறும்.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தோ்வு நாளன்று காலை 10.15 மணிக்கு தோ்வு மையத்திற்கு வரவேண்டும். இந்த அரிய வாயிப்பை சம்பந்தப்பட்ட பெற்றோா் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...