47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (பிப்.4) முதல் திறக்கப்படவுள்ளன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (பிப்.4) முதல் திறக்கப்படவுள்ளன.

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஆண்டு டிசம்பா் மாத முற்பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன. தமிழகம், புதுவையில் மீண்டும் கரோனா தொற்று தீவிரமானதையொட்டி, சில வாரங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

தற்போது, கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருவதையொட்டியும் தமிழகத்தில் பிப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுவை மாநில அரசு, பிப். 4-ஆம் தேதி முதல் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும் என்று அறிவித்தது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் , புதுவை அரசின் முந்தைய கரோனா தடுப்பு வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறையினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.