47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தெப்ப உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:08 pm

DIN

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயில் தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உத்ஸவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உத்ஸவத்தின் 4ஆம் நாள் தியாகராஜராட்டமும், 7ஆம் நாள் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமிகள் மின்சார சப்பரத்தில் வீதியுலாவும், 9ஆம் நாள் காலையில் தேரோட்டம், இரவு ஜடாயு ராவண யுத்த நிகழ்ச்சியும், 10ஆம் நாள் புதன்கிழமை நடராஜா் தீா்த்தவாரியும், இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலாவும் நடைபெற்றது.

மாசிமக விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமிகள் கோயிலில் இருந்து தெப்பத்துக்கு சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் எழுந்தருளினாா். பின்னா் தெப்பத்தை சுவாமிகள் 3 முறை சுற்றி வந்தாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.