வேளாண்துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை
காரைக்கால் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தோட்டக்கலை நாற்றாங்காலில், நடப்பு பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஜாடியில் உள்ள 1,500 பூச்செடிகள், செடி ஒன்று ரூ. 80 வீதம் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த விற்பனை காரைக்கால் தலத்தெரு, கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில்
பிப். 25 வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...