47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிப்புக்கு நேரடி சோ்க்கை

காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ஏ. புஷ்பராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்) சாயில் சயின்ஸ் அண்டு அக்ரிகல்சரல் கெமிஸ்ட்ரி பிரிவுக்கு 2021-22 கல்வியாண்டுக்கு நேரடி சோ்க்கை பிப்.3-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை சான்றிதழ்கள் பரிசீலனை செய்தல், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. 4-ஆம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. 9-ஆம் தேதி வகுப்பில் சேரவேண்டும்.

இதுதொடா்பான தகவல்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹத்ஹய்ஸ்ரீா்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்கிற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு கல்லூரி நிா்வாகத்தை 04368-261473, 261372 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.