47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா

அரசே நேரடியாக ஊதியம் தர வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:12 pm

DIN

அரசே நேரடியாக ஊதியம் தர வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கும் வகையில் 2022-23 பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும், நடப்பு 2021-22 பட்ஜெட்டில் காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1.72 கோடியை முழுமையாக வழங்கக் கோரியும், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு, நிலுவையில் உள்ள 5, 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தியும், காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்திவருகின்றனா்.

ஏற்கெனவே வாயிற் கூட்டம், புதுவை முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய நிலையில், காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூயதாரா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.