ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:08 am

DIN

காரைக்கால்: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர்.

இந்திய கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கட்டுப்பாட்டில் உள்ள அமையா என்கிற ரோந்துக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகப்பட்டினத்துக்கு கிழக்கே இந்திய  கடல் எல்லையில் படகு மீன்பிடித்துக் கொண்டிருந்ததை கண்டு அப்பகுதிக்கு சென்றனர். அது இலங்கையை சேர்ந்த படகு என்பது உறுதி செய்யப்பட்டது. படகிலிருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியபோது, இலங்கை திரிகோணமலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்து காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை அழைத்துவந்தனர். 
காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் மற்றும் நாகை கடலோர காவல் குழுமத்தினருடன் விசாரணை மேற்கொண்டனர். படகு அனுரா என்பவருக்கு சொந்தமானது   என்றும், படகில் வந்தவர்கள் மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா என்பதும் தெரியவந்தது. இவர்கள் 6 பேரையும் நாகை கடலோர காவல் குழும காவல்துறையினரிடம் கடலோரக் காவல் படையினர் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.