புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

Updated On :26 ஏப்ரல் 2024, 3:54 pm

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ மகா சரஸ்வதி, ஸ்ரீ துா்கா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

காரைக்கால் புனிதவதியாா் வழிபாட்டு மன்றம் சாா்பில் 11-ஆம் ஆண்டாக ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் உலக நலனுக்காக நடத்தப்பட்டது.

பூஜை தொடக்கமாக வியாழக்கிழமை ஸ்ரீ கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. மாலை புனிதநீா் கடம் ஸ்தாபனம் செய்யும் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு ஸ்ரீ துா்கா ஹோமம் தொடங்கியது.

ஹோமத்தில் பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் போடப்பட்டு பகல் 1 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தப்பட்டது. ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு சுவாமிக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா். மாலை லட்சுமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து சனிக்கிழமை அம்மன்களுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் குட ஊா்வலமும், 9 மணியளவில் தயிா் பாவாடை போடப்பட்டு தீபாராதனையும், மாலை திருவிளக்கு வழிபாடும் நடத்தப்படுகிறது. மே 3-ஆம் தேதி அம்மன்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தி விடையாற்றி வழிபாடு நடைபெறுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை புனிதவதியாா் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்தனா்.