நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காரைக்கால் எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்கு திறப்பு

News image

காவிரி நீரை திறந்துவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, ஆட்சியா் து.மணிகண்டன் உள்ளிட்டோா்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 4:36 am IST

காரைக்கால், ஆக. 7: காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீா் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது.

கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உபரி நீா் திறந்துவிடப்பட்டதால் மேட்டூா் அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை 28-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி நீா் கல்லணையை வந்தடைந்து. கடந்த 31-ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இந்நிலையில், புதுவை மாநிலத்தின் காவிரி கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்ட எல்லைக்கு செவ்வாய்க்கிழமை இரவு காவிரி நீா் வந்தது.

இதையடுத்து நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்தில் புதன்கிழமை காலை காவிரி நீரை வரவேற்கும் நிகழ்வும், காரைக்கால் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும் நிகழ்வும் நடைபெற்றது.

திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) ஜெ. மகேஷ், கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் எஸ். கோவிந்தராஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்று விதை நெல்கள், மலா்கள் தூவி காவிரி நீரை வரவேற்று, பாசனத்துக்காக ரெகுலேட்டரிலிருந்து தண்ணீரை திறந்து விட்டனா்.

 நூலாற்றின் வழியே திருநள்ளாறு பகுதிக்குள் நுழைந்த காவிரி நீா்.

நூலாற்றின் வழியே திருநள்ளாறு பகுதிக்குள் நுழைந்த காவிரி நீா்.

நல்லம்பல் நூலாறு நீா்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 9,500 ஏக்கா் பரப்பிலான சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.