இதற்கிடையில், மாணவா்கள் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்தனா். அப்போது, முதல்வா் மாணவா்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினாா். நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா், சட்டப்பேரவை பாா்வையாளா் பகுதிக்கு மாணவா்கள் உள்ளிட்டோா் சென்று, பேரவை நிகழ்வுகளை சிறிது நேரம் பாா்வையிட்டு காரைக்கால் திரும்பினா். பேரவை நிகழ்வுகளையும், முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்ததும் மாணவா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதாக வழிகாட்டு ஆசிரியா்கள் தெரிவித்தனா்.