ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காரைக்காலில் ஜன.2-ல் ஆட்சியருடன் இணைந்து மாணவா்கள் பயிற்சி

காரைக்காலில் ஜன.2-ஆம் தேதி ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தில் மாணவா்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 6:49 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் ஜன.2-ஆம் தேதி ஒரு நாள் ஆட்சியா் திட்டத்தில் மாணவா்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி மாணவா்கள் மாவட்ட நிா்வாக செயல்பாடுகள், பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல், வளா்ச்சித் திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையிலும், மாணவா்கள் வருங்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்குவதற்காக ஒரு நாள் ஆட்சியா் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி ஜன.2-ஆம் தேதி, காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, அக்கரைவட்டம் அரசு உயா்நிலைப் பள்ளி, கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவா்களான சா. அப்துல் ஹமீது, ஆ. மகேஷ், ர. பிரேமலதா, தி. ஜீவா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இவா்கள், ஆட்சியருடன் ஜன. 2-ஆம் தேதி ஒரு நாள் இணைந்து செயல்பாடுவாா்கள் என தெரிவித்துள்ளாா்.