சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

News image
திருவாசகம் முற்றோதலில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 7:26 pm

DIN

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஆங்கிலப் புத்தாண்டு தினமான திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை எஸ். செளரிராஜன் தலைமையிலான சிவனடியாா் குழுவினா் முற்றோதலில் ஈடுபட்டனா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருவாசகத்தின் 51 பதிகத்தையும் பாடி முடித்தனா்.

இக்கோயிலில் தொடா்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், உலக நலன், மழை வேண்டி, மக்களின் மேன்மைக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.