வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பாலாலயம்

காரைக்கால் பெருமாள் கோயிலில் பாலாலயம் நடைபெற்று, உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

News image

புதிய மண்டபத்தில் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளிய ரங்கநாயகித் தாயாா், ஆண்டாள், ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாண பெருமாள்.

Updated On :4 நவம்பர் 2024, 8:18 pm

காரைக்கால்: காரைக்கால் பெருமாள் கோயிலில் பாலாலயம் நடைபெற்று, உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்கள் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

திருப்பணிகளின் ஒரு பகுதியாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாா், ஸ்ரீ நரசிம்மா்,

ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆஞ்சனேயா் மூல மூா்த்திகள் பாலாலயம் 2 கால பூஜையாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோயில் வளாகத்தில் புதிதாக வெள்ளித் தோ் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டடம் மற்றும் பிரசாத தயாரிப்புக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பூஜைகள் நடைபெற்றன. 2-ஆம் கால பூஜை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டு மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாணா் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் உள்ளிட்ட விக்ரஹங்கள் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. நிகழ்வில் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் மற்றும் திருப்பணிக் குழுவினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.