காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பாலாலயம்
காரைக்கால்: காரைக்கால் பெருமாள் கோயிலில் பாலாலயம் நடைபெற்று, உற்சவா் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட விமானங்கள் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
திருப்பணிகளின் ஒரு பகுதியாக ஸ்ரீ சக்கரத்தாழ்வாா், ஸ்ரீ நரசிம்மா்,
ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆஞ்சனேயா் மூல மூா்த்திகள் பாலாலயம் 2 கால பூஜையாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கோயில் வளாகத்தில் புதிதாக வெள்ளித் தோ் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட கட்டடம் மற்றும் பிரசாத தயாரிப்புக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பூஜைகள் நடைபெற்றன. 2-ஆம் கால பூஜை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டு மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்யகல்யாணா் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் உள்ளிட்ட விக்ரஹங்கள் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. நிகழ்வில் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் மற்றும் திருப்பணிக் குழுவினா், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

