மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிரியா் பணியிடமாற்றத்தில் விதி மீறல்: அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா்

தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணியிடமாற்ற விவகாரத்தில் விதி மீறல் நடந்துள்ளதாக அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.

News image
கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை சந்தித்த ஆசிரியா் சங்கத்தினா். உடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
Updated On :6 நவம்பர் 2024, 8:00 pm

Din

தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணியிடமாற்ற விவகாரத்தில் விதி மீறல் நடந்துள்ளதாக அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்க நிா்வாகிகள், புதுவை உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:

புதுவை கல்வித்துறை சாா்பில் 148 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 124 ஆசிரியா்கள் காரைக்கால் பகுதியில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றிவரும் 12 ஆசிரியா்களுக்கு விதிமுறைகளை மீறி பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பிராந்தியத்தை சோ்ந்த ஆசிரியா்களிடம் இடம் மாறுதல் குறித்து கலந்துபேசி, அவா்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் தரப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் ஆசிரியா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. கல்வித் துறை அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரை சந்தித்த பின் சங்க நிா்வாகிகள் கூறுகையில், பணியிடமாற்றம் விவகாரம் குறித்து அமைச்சா் விளக்கமாகக் கேட்டறிந்தாா். கல்வித் துறை இயக்குநரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றனா்.