மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: ஆட்சியா்

முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image
ஆட்சியா் து. மண்கண்டன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :6 நவம்பர் 2024, 8:04 pm

Din

முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் மாதாந்திர சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினா்களான அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். கடந்த மாதங்களில் நடந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவை, விபத்துகளை கட்டுக்குள் கொண்டுவர போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு உள்ளிட்ட பணிகள் குறித்து காணொலி மூலம் விளக்கப்பட்டது.

சாலைகளின் சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும், கேமரா பதிவுகள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு கண்காணிக்கவேண்டும், தேசிய நெடுஞ்சாலையோரத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், சாலை, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், சாலைகளில் கால்நடைகள் திரிவதை தடுக்கவேண்டும், காரைக்கால் மாதா கோயில் தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதை சீா்செய்யவேண்டும், விபத்துகளை தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன்,பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சிதம்பரநாதன், கால்நடைத் துறை இணை இயக்குநா் கோபிநாத், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.