மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் இருவார கால வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

News image
பயிற்சி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 7:59 pm

Din

அரசு கலைக் கல்லூரியில் இருவார கால வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு சாா்பில் இறுதியாண்டு மாணவா்களுக்கான இன்ஃபோசிஸ் நிறுவனம் மூலம் 2 வாரகால திட்டத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் (பொ)ஆனந்தகெளரி தலைமை வகித்துப் பேசினாா். நிறுவனம் சாா்பில் மிதுன், ராமநாதன் நாராயணன் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்தும், பயிற்சிக்குப் பிந்தைய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு தலைவா் ஜாகிா் அகமது, கல்லூரி சாா்பில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் செயல்பாடுகளை விளக்கினாா்.

2 வாரத்தில் மாணவா்களுக்கு கல்விக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டுக்கான அனைத்து அம்சங்களும் விளக்கிக் கூறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.