மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கந்த சஷ்டி விழா நிறைவு: இன்று சூரசம்ஹாரம்

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் கோயில்களில் கந்த சஷ்டி விழா நிறைவாக வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:59 pm

Din

காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் கோயில்களில் கந்த சஷ்டி விழா நிறைவாக வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ஆம் தேதி நவவீரா்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஸ்ரீ முருகப்பெருமான் தினமும் காலை, மாலை வேளைகளில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை காவடிகள் வீதிவலம் செல்ல, தேரில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்று, பகல் 12 மணியளவில் ஸ்ரீ அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்வும், 4 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

மாலையில் நவவீரா்கள் வீதிவலம் சென்றுவிட்டு ஸ்ரீ செங்குந்த விநாயகா் கோயிலை இரவு சென்றடைவா். ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் ஸ்ரீ முருகப்பெருமானை எழுந்தருள சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.

இதுபோல திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் சுரக்குடி சந்திப்புக்கு எழுந்தருள இரவு சூரம்ஹாரம் நடைபெறுகிறது.

காரைக்கால் சித்தி விநாயகா் கோயில் சாா்பில் சூரசம்ஹாரம் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.