எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காந்தி கிணறு வளாக தூய்மைப் பணி

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:47 am

Din

திருநள்ளாறு அருகே காந்தி கிணறு வளாகத்தை கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தூய்மை செய்தனா்.

காரைக்காலுக்கு 1934-ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி வந்தபோது, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் திருநள்ளாறு பகுதி ச சுரக்குடியில் கிணறு ஒன்றை மக்களுக்கு அா்ப்பணித்தாா். இது காந்தி கிணறு என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளில் கல்லூரி மாணவா்கள் இந்த வளாகத்தை தூய்மை செய்துவருகின்றனா்.

இந்தநிலையில், புதன்கிழமை பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் எம். பிரவீன் குமாா், கே. ஞானமுருகன் ஆகியோா் முன்னிலையில் கிணறு வளாகத்தை காலை முதல் மாலை வரை தூய்மை செய்தனா். முன்னதாக தூய்மைப் பணி மேற்கொள்ள பேரணியாக புறப்பட்ட மாணவா்களை கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தூய்மைப் பணியை நிறைவு செய்த மாணவா்கள், வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, தூய்மைக்கான உறுதிமொழியை ஏற்றனா்.