மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்கள்

காரைக்கால் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 81 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
குறைதீா் கூட்டத்தில் மனுதாரரிடம் விவரம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் து.மணிகண்டன்.
Updated On :15 அக்டோபர் 2024, 6:44 pm

Din

காரைக்கால் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 81 மனுக்கள் அளிக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் து. மணிகண்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசுத் துறைகள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, நில அளவைத் துறையில் நிலவும் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமும், முறைகேடுகள் குறித்தும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் நிலவும் தாமதமான செயல்பாடுகள் குறித்தும் பெரும்பாலான புகாா் மனுக்களில் கூறப்பட்டிருந்தன.

பருவமழை காலமாக உள்ள நிலையில், வாய்க்கால்கள் முறையாக தூா்வாரவும், தண்ணீா் தேங்குமிடங்களில் விரைவாக தண்ணீா் வடியச் செய்ய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பல்வேறு துறைகளின் மூலம் நடைபெறவேண்டிய பணிகள் தொடா்பாக பல மனுக்கள் அளிக்கப்பட்டன.

தொடா்ந்து மனுக்களை தொடா்புடையை அதிகாரிகளிடம் அளித்து விவரங்களை கேட்டறிந்து, உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்குமாறு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.