மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதி

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்கி வருவோா் மட்டும் காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

News image
தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டியை தடுத்து நிறுத்தும் காவலா்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:06 pm

Din

தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்கி வருவோா் மட்டும் காரைக்கால் ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அரசுத் துறையினா் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் எனவும், அனைத்து அரசுத்துறையினரும் தங்களது அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் அண்மையில் அறிவுறுத்தியிருந்தாா்.

எனினும் இந்த அறிவுறுத்தலை அரசுத் துறையினா் பொருட்டாக கருதவில்லை. வழக்கம்போல தலைக்கவசம் அணியாமலேயே அலுவலகங்களுக்கு செல்கின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்துக்குள் இருசக்கர வாகனங்களை ஓட்டிவரும் இருசக்கர வாகன ஓட்டிகள் (ஊழியா்கள், மக்கள்) அனைவரும் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் ஆட்சியரக வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலா் நிறுத்தி, வெளியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல அறிவுறுத்தி வருகிறாா்.