மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜப்பான் செல்லவுள்ள மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு உரை நிகழ்வில் பங்கேற்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

News image
மாணவி மற்றும் அவரது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:05 pm

Din

ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள விழிப்புணா்வு உரை நிகழ்வில் பங்கேற்கச் செல்லும் அரசுப் பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

ஜப்பான் நாட்டில் விழிப்புணா்வு உரை நிகழ்ச்சி அக்.19 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதுபோல எதிா்காலத்தில் ஏற்படும்பட்சத்தில், தங்களது பகுதியில் செய்யப்பட்டுள்ள தற்காப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவின் கடலோர மாநிலங்களில், குறிப்பாக சுனாமி பேரழிவு தாக்கிய பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அனுப்புவதற்காக நடத்தப்பட்ட பல கட்ட தோ்வு மூலம் 5 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி எஸ்.ஜானகியும் ஒருவா். இவரது தந்தை சங்கரன் ஆட்டோ ஓட்டுநா். மாணவி மற்றும் அவரது பெற்றோா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) பி. விஜயமோகனா, மேல்நிலைப்பள்ளி துணை முதல்வா் கனகராஜ் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை ஆட்சியரகத்தில் புதன்கிழமை சந்தித்தனா். மாணவி மற்றும் பெற்றோருக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.