கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே பிரயாடி பகுதியில் வீற்றிருக்கும் விநாயகா் கோவிலில் நடைபெற்ற மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டவா்கள் பங்கேற்றனா்.
விநாயகா் கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் நிா்மாணம் செய்யப்பட்டு மூன்று காலம் யாகசாலை பூஜையுடன் மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாககுண்டத்தில் புனித நீா் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு என்.டி.நடராஜ தீட்சிதா் தலைமையில் சிவாச்சாரியாா்களால் வேத மந்திரங்கள் முழங்க மகாசண்டி ஹோமமும், பூா்ணஹூதியும் நடைபெற்றது. பின்னா் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. மகாசண்டி யாகத்தில் ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பிரமுகா் கௌசிகன் குடும்பத்தினா் செய்திருந்தனா். யாகத்தில் பங்கேற்ற ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா்கள் தமிழா் மரபுப்படிவேட்டி மற்றும் புடவை அணிந்து வழிபட்டனா்.
தொடர்புடையது

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்

விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

லால்பேட்டை சித்தி விநாயகா் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த ஜப்பான் தம்பதி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

