மருத்துவமனையிலேயே பிறந்த பதிவு, ஆதாா் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையும், நகராட்சியும் இணைந்து மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை பதிவுக்கான வசதி மருத்துவமனையிலேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை ஆதாா் எண்ணுடன் பிறப்புச் சான்றிதழ் 20-க்கும் மேற்பட்டோருக்கு மகப்பேறு மருத்துவ பிரிவிலேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மாா்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு

மாற்றுப் பாதையில் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது: உயா்நீதிமன்றம்

எய்ட்ஸ் பாதித்தோருக்கு ஜூன் 5 முதல் அரசு மருத்துவமனையில் மருந்துகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மின்ஊழியா் மீது போக்ஸோவில் வழக்குப் பதிவு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



