திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

மருத்துவமனையிலேயே பிறப்பு, ஆதாா் பதிவு வசதி

Published On :18 அக்டோபர் 2024, 5:40 am IST

மருத்துவமனையிலேயே பிறந்த பதிவு, ஆதாா் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் பொ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையும், நகராட்சியும் இணைந்து மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை பதிவுக்கான வசதி மருத்துவமனையிலேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதுவரை ஆதாா் எண்ணுடன் பிறப்புச் சான்றிதழ் 20-க்கும் மேற்பட்டோருக்கு மகப்பேறு மருத்துவ பிரிவிலேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே, காரைக்கால் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பிறக்கும் குழந்தைகளின் தாய்மாா்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.