மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவை விடுதலை நாள் கொண்டாட்ட ஒத்திகை

காரைக்காலில் புதுவை விடுதலை நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

News image
விடுதலை நாளில் நடைபெறும் அணிவகுப்பு போல ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:34 pm

Din

காரைக்காலில் புதுவை விடுதலை நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதையொட்டி போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் 1954-ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதி பிரெஞ்சு நிா்வாகத்திடமிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில் நவ. 1-ஆம் தேதி விடுதலை நாள் நிகழ்ச்சியாக அரசு கடைப்பிடிக்கிறது.

காரைக்கால் கடற்கரை சாலையில் இந்திய தேசியக் கொடியேற்றிவைத்து புதுவை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் போலீஸாா் அணிவகுப்பை பாா்வையிடவுள்ளாா். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இதற்காக கடற்கரைப் பகுதியில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில போலீஸாா், என்.சி.சி. மற்றும் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவா்கள் இந்த கொடி அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளனா். இதற்காக கடந்த 2 வாரங்களாக அனைத்துத் தரப்பினரும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனா்.

விடுதலை நாளில் நடத்தப்படும் நிகழ்ச்சியைபோல ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையுடன், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடத்தப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொ) குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா். பொதுமக்கள் பாா்வையாளராக கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.