உலகெங்கிலும் அன்னையர் நாள், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் நிச்சயம் அதற்கான தேவை குறைவுதான். காரணம். நாள்தோறும் அம்மாவுடன் அன்பு பாராட்டும் மக்களே நம் நாட்டில் அதிகம்.
எனவே, அம்மா மீதான அன்பைச் சொல்ல ஒரு குறிப்பிட்ட நாள் தேவையில்லை என்றபோதிலும், உலகெங்கும் கொண்டாடும் பல கொண்டாட்ட நாள்களைப் போலவே, இந்த அன்னையர் நாளும் இந்தியாவில் தற்போது கொண்டாடத் தொடங்கி விட்டார்கள்.
அவ்வப்போது அவர்களுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால்ம் அன்னையர் நாளில் நிச்சயம் அதனை செய்யலாம்.
இந்த ஆண்டு அன்னையர் தினம் எப்போது? என்று கேட்பவர்களுக்கு பதில்.. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதும், இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அன்னையர் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னையர் தினம் தேசிய நாளா அல்லது சர்வதேச நாளா என்பதில் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன. நிச்சயமாக இது சர்வதேச அன்னையர் நாள்தான். பொதுவாகவே இதுபோன்ற கொண்டாட்ட நாள்களுக்கு ஒவ்வொரு நாடும் தனித்தனியாக அவர்களது கலாசாரத்துக்கு ஏற்ப ஒரு நாளைக் கொண்டாடுவது வழக்கம்.
வழக்கமாக, இந்தியா தவிர்த்து இந்த அன்னையர் நாளை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.
Summary
When is Mother's Day? History and celebration ideas!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










