மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
விமான கலசத்தில் வாா்க்கப்பட்ட புனிதநீா்.
Updated On :7 ஏப்ரல் 2025, 9:33 pm

Din

காரைக்கால்: மேலகாசாக்குடி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேலகாசாக்குடி பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவா் சிலை சிதிலமடைந்ததால், ஆகம விதிகளின்படி கோயிலில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, சிலை சீா்படுத்தி பஞ்சவா்ணம் தீட்டி அழகுப்படுத்தப்பட்டது. மேலும் கோயிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 4-ஆம் கால பூஜை திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நிறைவடைந்து மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் கடம் புறப்பாடானது. 9.30 மணிக்கு விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீா் வாா்க்கப்பட்டு சிவாச்சாரியா்கள் ஆராதனை காட்டினா்.

மூலஸ்தான பத்ரகாளியம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா, மாவட்ட சாா்பு நீதிபதி எஸ். ராஜசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஆா்.சி.கருணாகரன் மற்றும் திருப்பணிக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்ரகாளியம்மன்.