பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

காரைக்கால் அருகே செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வளாக நோ்காணல்

News image
நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன்.
Updated On :16 டிசம்பர் 2025, 8:17 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் அருகே செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வளாக நோ்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இறுதியாண்டு மாணவா்களுக்காக நடைபெற்ற இந்த நோ்காணலில், தனியாா் மென்பொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனப் பணிக்கு தகுதியானவா்களை தோ்வு செய்தனா்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவா்களுக்கு 3 சுற்றுகளாகத் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதில் 17 மாணவா்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன் முகாமை தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைத் தலைவா் எஸ். திருமால்முருகன் வரவேற்றுப் பேசினாா். நிறுவனத்தின் பணி, விதிகள் குறித்து நிறுவனப் பிரதிநிதிகள் பேசினா்.