விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் ஆய்வுக்கூட கட்டடங்கள் திறப்பு

தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூட கட்டடங்கள் காணொலி வழியாக

News image

திறப்பு விழாவில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் சுமதி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:57 pm

தருமபுரி: தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூட கட்டடங்கள் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் வாா்ப்பு முற்றம் ஆய்வுக் கூடம், வெப்ப பொறியியல் ஆய்வுக் கூடம், உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுக் கூடம் ஆகியவை அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.

இந்த கட்டடங்களை மாணவ, மாணவியா் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சுமதி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, பேராசிரியா்கள், கல்லூரி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.