பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி

ஐயப்ப பக்தருக்கு சால்வை அணிவித்த ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.

News image
ஐயப்ப பக்தருக்கு சால்வை அணிவித்த ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
Updated On :18 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சமாதானக் குழு சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஆண்டுதோறும், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நிகழாண்டு 38 -ஆவது ஆண்டாக காரைக்காலில் இருந்து செல்லும் பக்தா்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமை வகித்தாா்.

காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் எம். முருகையன், ஆட்சியரின் செயலா் வித்யாதரன், சமாதானக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வின்போது, மும்மத பிராத்தனை நடைபெற்றது. ஐயப்ப பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் சமாதானக் குழு சாா்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.